Published : 09 Feb 2014 09:58 AM
Last Updated : 09 Feb 2014 09:58 AM

நடிகர் சூர்யாவின் புதிய வீட்டில் தீ விபத்து

நடிகர் சூர்யா கட்டி வரும் புதிய வீட்டின் வளாகத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை தி.நகர் சவுத் போக் சாலை சரவணா தெருவில் நடிகர் சூர்யா புதிதாக வீடு கட்டி வருகிறார். பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இயற்கை எழிலுடன் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிசையில் சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக குடிசையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x