Published : 27 Aug 2016 09:51 AM
Last Updated : 27 Aug 2016 09:51 AM
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இப்பணி களுக்கு விண்ணப்பித்தவர்களில் 194 பேரின் விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதியின்மை, அதிக வயது, விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாமை உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள் ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நிராக ரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியலை பெயர் மற்றும் நிரா கரிப்புக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT