பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: ரயில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் வரும் 4-ம் தேதி சூலூர்பேட்டை நெல்லூர் பயணிகள் ரயில் (66031/66032) சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் திருநின்றவூர் இடையே ரயில்பாதை பராமரிப்பு பணிகள் வரும் 4, 6, 7, 8, 9, 10, 11-ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதனால், மேற்கண்ட நாட்களில் கடற்கரையில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் விரைவு பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாபேட்டை, புட்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in