Published : 09 Jun 2016 08:13 AM
Last Updated : 09 Jun 2016 08:13 AM
வழக்கறிஞர் சட்டப்பிரிவு சட்ட திருத் தங்கள் தொடர்பான பிரச்சினையில் ஒரு முடிவு எடுக்கும் வரை புதிய திருத்தங்களின் கீழ் வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன் சில் சார்பில் நானும், துணைத் தலைவர் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் ஆகியோர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 34(1)-ன் கீ்ழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிருத்தங்கள் குறித்து விவாதித்தோம்.
இந்த பிரச்சினை தொடர்பாக அனைத்து வழக்கறிஞர் சங்கங் களின் கருத்துக்களையும் கேட்டு அக்கருத்துக்களை பார் கவுன்சில் மூலமாக சமர்ப்பிக்க அவர் அறி வுறுத்தினார். அந்த கருத்துக்களை நீதிபதிகள் குழுவுக்கு அனுப்பி இந்த திருத்தங்களை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமாகத்தான் தீர்வு காண முடியுமே தவிர, நீதிமன்ற புறக்கணிப்பு, போராட்டம், ஆர்ப் பாட்டம், பேரணி மூலமாக தீர்வு காண முடியாது. அதுபோன்ற செயல் களில் வழக்கறிஞர்கள் ஈடுபட வேண் டாம் என கேட்டுக் கொள்கிறோம். எனவே தமிழ்நாடு மற்றும் புதுச் சேரிக்குட்பட்ட அனைத்து வழக் கறிஞர் சங்கங்களும் இதுதொடர் பாக தங்களது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வரும் ஜூன் 17-ம் தேதிக்குள் பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த பிரச்சினையில் ஒரு முடிவு காணும் வரை சட்ட திருத்தங்களின் கீழ் வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. யாரும் பயப்பட வேண்டாம். அகில இந்திய பார் கவுன்சில் தலை வரும் இதுகுறித்து தலைமை நீதிபதிக்கும், பார் கவுன்சிலுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். எங்களிடம் கருத்து கேட்டபோது இதை அப் போதே நாங்களும் எதிர்த்தோம். பார் கவுன்சில் தனது நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லாமல் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை தவறு செய்த வழக்கறிஞர்கள் 100 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இந்த பிரச்சினையிலும்கூட உயர் நீதிமன்றம் இந்த புதிய திருத்தங்களின் மூலம் வழக் கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும், வழக்கறிஞர் பதிவுச் சான்றிதழை ரத்து செய்யும் அதி காரம் பார் கவுன்சிலுக்குத்தான் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வழக்கறிஞர்களின் நலனுக்கு பார் கவுன்சில் எப்போதும் துணை நிற்கும். யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர்கள் எந்தவித போராட்டம், பேரணி என எதையும் நடத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT