Published : 07 Apr 2017 08:46 AM
Last Updated : 07 Apr 2017 08:46 AM
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதன் கடந்த 2 வாரங்களாக வீடு, வீடாகச் சென்று மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் எழில்நகர், சந்திரசேகர் நகர், மூப்பனார் நகர் பகுதிகளில் நேற்று வாக்குசேகரித்தார். இந்த தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் கலைக்குழு சார்பில் வீதிகளில் 5 பேர் கொண்ட குழுவினர் தொகுதியில் உள்ள கழிவுநீர் பிரச்சினை, குடிநீர், சாலைகள் பிரச்சினைகளை நாடகங்கள் மூலம் மக்களிடம் எடுத்துரைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT