Published : 01 Mar 2017 09:46 AM
Last Updated : 01 Mar 2017 09:46 AM

பொதுத் தேர்வுகள் குறித்து புகார் செய்ய கட்டுப்பாட்டு அறை: அரசு தேர்வுத்துறை ஏற்பாடு

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் தொடர்பான புகார்களை யும் கருத்துகளையும் பொதுமக் கள் தெரிவிக்க வசதியாக சென்னையில் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8-ம் தேதியும் தொடங்க உள்ளன. பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். கட்டுப்பாட்டு அறையை 8012594114, 8012594115, 8012594122, 8012594124 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x