Published : 24 Jan 2017 09:03 AM
Last Updated : 24 Jan 2017 09:03 AM
சென்னையில் சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை விரை வில் தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் உரை யில் கூறப்பட்டிருப்பதாவது:
குடிசைகள் இல்லாத கிரா மங்களையும், நகரங்களையும் உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம். இந்த இலக்கை அடைய ஏழைகளுக்கு வீட்டுவசதி வழங்கும் இயக்கம் 2016-17-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 619 வீடுகளை யும் நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 343 வீடுகளையும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் மேலும் பல வீட்டுவசதித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட செயல் பாடுகளில் கணிசமான முன்னேற் றத்தை தமிழகம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சின்னமலை - விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் - பரங்கிமலை இடையேயான உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சுரங்க வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.
வண்ணாரப்பேட்டை - திரு வொற்றியூர் விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் நீட்டிப்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணி களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT