

‘தாமாக வருமானம் அறிவிக்கும் திட்டம்-2016 தொடர்பான சந்தேகங்கள் குறித்துத் தகவல் அறிய சென்னை வருமானவரி அலுவலகத்தில் சிறப்புச் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது'.
இது தொடர்பாக சென்னை வருமானவரி அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''நடப்பு 2016-ம் ஆண்டுக்கான தாமாக வருமானம் அறிவிக்கும் திட்டம் தொடர்பான சந்தேகங்கள் குறித்துத் தகவல் அறியலாம். இதற்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் ஒரு சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.