Published : 24 Mar 2017 08:07 AM
Last Updated : 24 Mar 2017 08:07 AM
8 லட்சம் பேர் எழுதியுள்ள பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படு கிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங் களை நிரப்புவதற்காக கடந்த 30.05.2015 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது, இந்த தேர்வில் தேர் வர்கள் பெற்ற மதிப்பெண்கள் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, மதிப்பெண்ணை பின்வரும் இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
மேலும், தேர்வெழுதிய அனைத் துத் தேர்வர்களின் மதிப்பெண் களின் விவரப் பட்டியலும் வருவாய் மாவட்ட வாரியாக அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (dge.tn.gov.in) வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டாலும் பணி நியமன முறை எவ்வாறு நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT