நாளிதழ் அலுவலக எரிப்பில் 3 பேர் பலியான வழக்கு: மேல்முறையீட்டை விசாரிக்கவிடாமல் இழுத்தடிக்கும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்- உயர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு

நாளிதழ் அலுவலக எரிப்பில் 3 பேர் பலியான வழக்கு: மேல்முறையீட்டை விசாரிக்கவிடாமல் இழுத்தடிக்கும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்- உயர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு
Updated on
1 min read

மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசார ணையை தடுக்க எதிர்தரப்பினர் பல் வேறு தந்திரங்களை கையாள்வ தாக சிபிஐ வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

மதுரை நாளிதழ் அலுவலகம் மீது 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் ஊழியர் வினோத், கோபிநாத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக அட்டாக் பாண்டி, டி.எஸ்.பி. ராஜராம் உட்பட 17 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர்களை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு டிச.9-ம் தேதி விடுதலை செய்தது.

இதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

சிபிஐ வழக்கறிஞர் ஜெயக் குமார், பூங்கொடி வழக்கறிஞர் ஆண்டிராஜ் மற்றும் எதிர்தரப்பினர் சார்பில் ஆஜராவதற்காக இலவச சட்ட உதவி மையத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஆகியோர் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கின் 17, 3 மற்றும் 13-வது எதிர்தரப்பு வழக்கறிஞர் கள் அஜ்மல்கான், அழகுமணி, தீபக் ஆகியோர் விசாரணையை ஒத்திவைக்கக் கேட்டுக்கொண்ட னர். இதற்கு சிபிஐ வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆட்சேபம் தெரிவித் தார். விசாரணையை நடத்தக் கூடாது என்பதற்காக எதிர்தரப்பில் சூட்சுமங்கள் கையாளப்படுகிறது. வழக்கை நடத்த சிபிஐ தயா ராக உள்ளது. விசாரணையை ஒத்திவைக்கக் கூடாது என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘இந்த வழக்கு 2011-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ளது. இதுவரை 10 அமர்வுகள் முன் இந்த மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்துள்ளது. எதிர்தரப்பின் வழக்கறி ஞர்கள் தங்களது வக்காலத்துகளை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனால் அவர்களுக்கு ஆஜராக இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞரும், சிபிஐ தரப்பிலும், மற்றொரு மனுதாரர் தரப்பிலும் வழக்கை நடத்துவதற்கு தயாராக உள்ளனர். ஆனால், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்பதற்காகப் பல் வேறு காரணங்களை கூறுகின்ற னர் என்றனர். பின்னர் விசார ணையை நவ.17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in