

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவினருக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் 831 மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் பெற்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் கடந்த 20-ம் தேதி தொடங் கியது. முதல் நாள் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 69 மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் பெற்றனர். இதையடுத்து பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 பேர் உட்பட 731 மாணவர் களுக்கு கல்லூரிகளில் சேருவதற் கான அனுமதி கடிதம் வழங்கப் பட்டது.
இந்நிலையில் இரண்டாம் நாள் கலந்தாய்வு நேற்று காலை தொடங் கியது. கலந்தாய்வில் பங்கேற்கு மாறு 852 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 832 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அரசு மருத் துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 768 மாணவர்கள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 25 மாணவர்கள், தனி யார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரி களில் சேருவதற்கு 36 மாணவர்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 2 மாணவர்கள் என மொத்தம் 831 மாணவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள பொதுப் பிரிவினருக்கான 3-ம் நாள் கலந்தாய்வுக்கு கட்-ஆப் 196.75 முதல் 196.25 மதிப்பெண்கள் வரையுள்ள 756 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.