

கடந்த 6 நாட்களுக்குப் பிறகு தமிழகம் கர்நாடகா இடையே மீண்டும் அரசு பேருந்துகளின் சேவை நேற்று தொடங்கியது.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப் பினர் கடந்த 6 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால், தமிழகம் கர்நாடகம் இடையே பேருந்துகளின் சேவை முடங்கியது. தமிழகத்தில் இருந்து செல்லும் சுமார் 500 பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக் கப்பட்டன. குறிப்பாக, சென்னை கோயம்பேடில் இருந்து இயக்க வேண்டிய சுமார் 145 விரைவு பேருந்துகளும் தமிழக எல்லைவரை மட்டுமே இயக்கப் பட்டன. இந்நிலையில், நேற்று காலை முதல் பேருந்துகள் கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன.
ரூ.2 கோடி இழப்பு
இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கர்நாடகாவில் நடந்து வந்த தொடர் போராட்டங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் 500 அரசு பேருந்துகள் நிறுத்தப் பட்டன.
இதனால், தமிழக அரசுக்கு சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, கர்நாட காவில் இயல்பு நிலை திரும்பி யுள்ளதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு நேற்று காலை முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன’’ என்றனர்.