Published : 07 Dec 2013 12:16 PM
Last Updated : 07 Dec 2013 12:16 PM

மண்டேலா மறைவுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக அரசு 5 நாள் துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(வெள்ளிக் கிழமை) இரவு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று பின்னிரவு முதல் வரும் 10-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் இந்த 5 நாட்களில் அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x