Published : 07 Feb 2017 08:19 AM
Last Updated : 07 Feb 2017 08:19 AM

தோல்பொருள் தொழிலால் சுற்றுச்சூழல் பாதிக்க கூடாது: சென்னை மாநாட்டில் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் தோல்பொருள் தயாரிப் புத் தொழில் நடைபெற வேண்டும் என்று சென்னையில் நேற்று தொடங்கிய சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய தோல்பொருள் தொழில் நுட்ப நிபுணர்கள் சங்கம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) சார்பில் சர்வதேச தோல்பொருள், தொழில்நுட்ப நிபுணர்கள், வேதியியல் வல்லுநர் கள் சங்கங்கள் அமைப்பின் 34-வது சர்வதேச மாநாடு நேற்று தொடங் கியது. அந்த அமைப்பின் தலைவர் டயட்ரிச் டெக்ட்மேயர் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தோல் பதனிடும் துறையில் தோல்பொருள் தயாரிப்புத் தொழில் அதிக அளவில் நேரடி வேலைவாய்ப்புகளை அளிக் கிறது. இதில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 22 முதல் 40 சதவீதமாக உள்ளது.

இத்தொழிலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப் படாத வகையில் தோல்பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். பல் வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் அனுபவங்கள், ஆராய்ச்சி மேம் பாடுகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த மாநாடு உதவியாக இருக்கும் என்றார். சர்வதேச தோல்பொருள் தொழில்நுட்ப நிபுணர்கள், வேதி யியல் வல்லுநர்கள் சங்கங்கள் அமைப்பின் செயலாளர் கேம்பல் பேஜ், இந்திய தோல்பொருள் தொழில்நுட்ப நிபுணர்கள் சங்க தென்மண்டலத் தலைவர் என்.ஆர்.ஜெகநாதன் ஆகியோரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x