Published : 14 Jun 2017 07:23 PM
Last Updated : 14 Jun 2017 07:23 PM

சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக ஆறு பேர் செயல்படுவார்கள்: சபாநாயகர் அறிவிப்பு

சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக ஆறு பேர் செயல்படுவார்கள் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

பேரவைத் தலைவர் தனபால் சட்டப்பேரவையில் அறிவித்ததாவது:

''சட்டப்பேரவை தலைவர், துணைத் தலைவர் இல்லாத நிலையில், பேரவையை நடத்துவதற்கான மாற்றுத்தலைவர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்படி, சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக சு.ரவி (அரக்கோணம்), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), வி.வி.ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல் (பெரம்பூர்) ஆகியோர் செயல்படுவார்கள்'' என்றார்.

இதில், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ராஜன் செல்லப்பா, நரசிம்மன் ஆகியோர் தினகரனை சந்தித்து ஆதரவளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x