Published : 22 Sep 2016 07:18 PM
Last Updated : 22 Sep 2016 07:18 PM
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் நகல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடித்தத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட உணவு பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதாக ஆகிவிடும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு பிடி கத்திரிக்காயை வந்த போது, அதனை மத்திய அரசு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதேபோல் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்பதால் உலகின் பல நாடுகள் தடை விதித்துள்ளனர். அதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT