Published : 04 Jun 2016 07:57 AM
Last Updated : 04 Jun 2016 07:57 AM

பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பான 2-வது வழக்கில் முன்ஜாமீன் கோரி கரூர் அன்புநாதன் மனு தாக்கல்

தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக பதி வான இரண்டாவது வழக்கில் முன்ஜாமீன் கோரி கரூர் அன்பு நாதன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன்(46). இவர் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் கூறியுள்ளதாவது:

அய்யம்பாளையத்தில் என் வீடு, கிடங்கில் 22.4.2016-ல் தேர்தல் பறக்கும்படை போலீஸார் சோதனை நடத்தி ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820, வருமானவரித் துறையினர் ரூ.4.77 கோடி பறி முதல் செய்ததாகவும், வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக இப் பணத்தை பதுக்கி வைத்திருந்த தாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக் கில் உயர் நீதிமன்ற கிளை எனக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

மற்றொரு புகார்

ஆனால் 20 நாட்கள் கழித்து இதே சம்பவம் தொடர்பாக வேலா யுதம்பாளையம் போலீஸில் மண் மங்கலம் வட்டாட்சியர் மற்றொரு புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் என் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பள்ளியில் தாளாளராக இருந்து வருகிறேன். தொழில் போட்டி காரணமாக மொட்டைக் கடிதத்தில் அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் பறக்கும்படை போலீஸார் என் வீடு, கிடங்கில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். முறையாக வரு மான வரி செலுத்தி வருகிறேன்.

மேலும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. வருமானவரி ஆணையரின் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த முடியாது. என் மீதான குற்றச் சாட்டு தொடர்பாக ஏற்கெனவே வருமானவரித் துறையிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x