Published : 19 Jun 2017 03:21 PM
Last Updated : 19 Jun 2017 03:21 PM
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முறைகேடு தொடர்பாக திமுக மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் இன்று எரி சக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
கேள்வி நேரத்தின் போது, ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்த புகாரின் பேரில் முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன், தமிழக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சட்டப்பேர்வையில் கேள்வி எழுப்பினார்.
அப்போது அதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முறைகேடு தொடர்பாக திமுக மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக 12 வழக்குகள் திமுக மீது பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT