Published : 06 Jul 2016 10:56 AM
Last Updated : 06 Jul 2016 10:56 AM
தமிழகத்தில் பிறை தெரியாததால், நாளை (7-ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வது வழக்கம். கடந்த மாதம் 6-ம் தேதி பிறை தெரிந் ததை தொடர்ந்து, மறுநாள் ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அடுத்த 29 அல்லது 30 நாட்களுக்கு நோன்பு நீடிக்கும். ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை அறிவிப்புகளில் ஜூலை 7-ம் தேதிதான் ரம்ஜான் என அறிவித்திருந்தது. ஆனால், மற்ற நாள் காட்டிகளில் ஜூலை 6-ம் தேதி (இன்று) ரம்ஜான் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், ரம்ஜான் பண்டிகை தொடர்பான குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், நேற்று பிறை தெரியாததால், ரம்ஜான் பண்டிகை 7-ம் தேதி (நாளை) கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று வழக்கம்போல நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT