Published : 06 Jul 2016 10:56 AM
Last Updated : 06 Jul 2016 10:56 AM

நாளை ரம்ஜான்: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் பிறை தெரியாததால், நாளை (7-ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வது வழக்கம். கடந்த மாதம் 6-ம் தேதி பிறை தெரிந் ததை தொடர்ந்து, மறுநாள் ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அடுத்த 29 அல்லது 30 நாட்களுக்கு நோன்பு நீடிக்கும். ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை அறிவிப்புகளில் ஜூலை 7-ம் தேதிதான் ரம்ஜான் என அறிவித்திருந்தது. ஆனால், மற்ற நாள் காட்டிகளில் ஜூலை 6-ம் தேதி (இன்று) ரம்ஜான் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், ரம்ஜான் பண்டிகை தொடர்பான குழப்பம் நீடித்தது.

இந்நிலையில், நேற்று பிறை தெரியாததால், ரம்ஜான் பண்டிகை 7-ம் தேதி (நாளை) கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று வழக்கம்போல நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x