Published : 15 Feb 2017 08:27 AM
Last Updated : 15 Feb 2017 08:27 AM

பணம் பெற்றுத் தர சசிகலா வற்புறுத்தினார்: முன்னாள் எம்எல்ஏ தகவல்

சசிகலா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, பொள்ளாச்சி முன்னாள் எம்எல்ஏ வி.பி.சந்திரசேகர் கூறிய தாவது:

சசிகலாவுக்கு நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரவேற் கிறேன். அதில் ஜெயலலிதாவின் பெயர் சேர்க்கப்பட்டது தவறு. ஜெயலலிதாவின் ஆரம்ப கால ஆட்சியில் (1991-96) நான் எம்எல்ஏ வாகவும் குடிநீர் வடிகால் வாரியத் தலைவராகவும் இருந்தேன். அப்போது கட்சி நிதிக்காக குடிநீர் திட்டங்களில் இருந்து குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சமாக திட்ட மதிப்பீட்டின் 5 சதவீத தொகை வரை பெற்றுத் தருமாறு சசிகலா வற்புறுத்தினார். அந்த தொகையை தராததால் நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்.

சசிகலா தலையீடுதான் ஜெயலலிதா ஆட்சியின் பெயர் கெட்டுபோக காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x