Published : 26 Jun 2016 08:37 AM
Last Updated : 26 Jun 2016 08:37 AM
சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டலத்தில் மேற் கொள்ளப்பட்ட ரவுடிகள் தேடு தல் வேட்டையில் மாதவரம் காவல் மாவட்டத்தில் 28 பேர், வண்ணாரப்பேட்டையில் 25 பேர் மற்றும் பூக்கடை காவல் மாவட்டத்தில் 16 பேர் என மொத்தம் 69 ரவுடிகள் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
தெற்கு மண்டலத்தில் நடத்தப் பட்ட சோதனையில் தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் 13 பேர், அடையாறில் 15 பேர் மற்றும் புனித தோமையர்மலையில் 26 பேர் என 54 பேர் கைது செய்யப் பட்டனர்.
கிழக்கு மண்டலத்தில் கீழ்ப் பாக்கம் காவல் மாவட்டத்தில் 12 பேர், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் 5 பேர், மயிலாப்பூர் மாவட்டத்தில் 2 பேர் என பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.
இதேபோல மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான காவல் குழுவினர் 12 ரவுடிகளை கைது செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT