Published : 22 May 2017 10:34 AM
Last Updated : 22 May 2017 10:34 AM

பல்கலை. செமினார் வகுப்புகள் திடீர் ரத்து: மாணவ, மாணவியர் ஏமாற்றம்

மதுரையில் முன்னறிவிப்பு இன்றி அஞ்சல் வழிக்கல்வி தொடர் வகுப்புகளை ரத்து செய்ததால் பல்கலைக்கழக உள்ளூர், வெளியூர் மாணவ, மாணவிகள் பரிதவித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல் வழி முதுகலை, இளங்கலை மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரையில் பல்வேறு மையங்களில் தொடர் வகுப்புகள் (செமினார்) நடத்தப்படுகின்றன. இதன்படி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் தொடர் வகுப்பு நடத்தப்படுகிறது.

இந்தி உட்பட சில முதுகலை வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தொடர் வகுப்பு நேற்று காலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூர், உள்ளூர் மாணவர்கள் ஏராளமானோர் பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்துக்கு நேற்று காலை வந்தனர்.

அப்போது அங்குள்ள அறைகளில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரித்தபோது, காவலர் தேர்வு நடப்பதால் மற்றொரு விடுமுறை நாளில் வகுப்பு நடக்கும் எனப் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, மாணவர்களுக்கு தொடர் வகுப்பை மாற்றி அலைக்கழிப்பு செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் மன உளைச்சலுடன் திரும்பிச் செல்வதாகக் கூறினர்.

இது குறித்து பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது, போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x