

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடை திறக்கமாட்டோம் என அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு, அதை மீறி தற்போது மீண்டும் அங்கு மதுக்கடையைத் திறந்துள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு நீதிபதிகளிடம் முறையீடு செய்தார். இது தொடர்பாக அவமதிப்பு வழக்குத் தொடர நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் எம்.சத்ய நாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, ‘‘திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மது பானக் கடை திறக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த அதிகாரி மீது துறைவாரி யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்கள் எதிர்ப்பு தெரி விக்கும் பகுதியில் மதுபானக் கடை அமைக்கமாட்டோம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் தற்போது அந்த உத்தரவாதத்தை மீறி மீண்டும் சாமளா புரத்தில் மதுக்கடையை அரசு திறந்துள்ளது. தவிர பெண் ணைத் தாக்கிய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வும் வழங்கப் பட்டுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனவே இதுதொடர்பாக அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளேன்’’ என் றார். அதற்கு நீதிபதிகள் வழக்குத் தொடர அனுமதி அளித்தனர்.