அவதூறு வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை ஒத்திவைப்பு

அவதூறு வழக்கு: விஜயகாந்த் மீதான விசாரணை ஒத்திவைப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் 2012-ல் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, அரசு வழக்கறிஞர் குப்புசாமி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் விலக்களித்துள்ளதால் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி முகமது அலி, விசாரணையை நவ.27-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in