Published : 11 Mar 2017 09:57 AM
Last Updated : 11 Mar 2017 09:57 AM

பணிப்பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு: அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்யும்வரை சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு

தனக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த பணிப்பெண்ணை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா, அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரிய மனுவுக்கு போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதுவரை அவர் களை கைது செய்யக் கூடாது என கூறியுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகி யோர் மீது தூத்துக்குடி, புதுக் கோட்டை போலீஸார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர். சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த சகோதரிகள் இருவர் அளித்த புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், பணிப்பெண் களுக்கு சட்ட உதவி அளித்த திசையன்விளை வழக்கறிஞர் சுகந்தியின் வீட்டின் மீது செப். 11-ல் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் மீது திசையன்விளை போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவுக்கு எதிராக தூத்துக்குடி புதுக்கோட்டை, திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக தூத்துக்குடி காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளித்தனர். இத னிடையே, புகாரை திரும்பப் பெறுமாறு சசிகலா புஷ்பா உள் ளிட்டோர் தன்னை மிரட்டியதாக டிஜிபி அலுவலகத்தில் பணிப் பெண்களில் ஒருவர் புகார் அளித் தார். அதன்பேரில், சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திசையன்விளை போலீஸார் ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மூவரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜெ.நிஷாபானு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூவருக்கும் முன்ஜாமீன் வழங்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆட்சேபம் தெரிவித்தார். அது தொடர்பாக, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை, சசிகலா புஷ்பா உள்ளிட்டோரை கைது செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x