Published : 29 Aug 2016 04:19 PM
Last Updated : 29 Aug 2016 04:19 PM
கோவையில் இருவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவருக்கும், கோவையைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருமே இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல், தொண்டை வலிக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT