Published : 08 Apr 2017 09:15 AM
Last Updated : 08 Apr 2017 09:15 AM

தஞ்சாவூர் அருகே காதல் விவகாரத்தில் மகளை கொலை செய்த பெற்றோர் உட்பட 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே காதல் விவ காரத்தில் பிளஸ் 1 மாணவியை எரித்துக் கொன்ற பெற்றோர் மற்றும் அந்த மாணவியுடன் பழகிவந்த இளைஞர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை அடுத்த மாரநேரி நெடுங்குளம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் பிலிப். இவரது மகள் நான்சி(17). திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்சி உடல் கருகிய நிலையில் வீட்டின் பின்புறம் இறந்து கிடந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட் டது. இது தொடர்பாக ஜான் பிலிப், பூதலூர் காவல் நிலையத் தில் அளித்த புகாரில், “தனது மகள் வயிற்று வலி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்” என கூறியிருந்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நான்சியின் உடல் அடக்கம் செய் யப்பட்டது. நான்சி இறந்தது குறித்து போலீஸார் தீவிர விசா ரணை நடத்தி வந்தனர்.

அதில், நான்சியும் அதே பகுதி யைச் சேர்ந்த சுரேஷ் குமார்(28) என்பவரும் பழகி வந்துள்ளனர். இதற்கு நான்சியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், அந்தப் பெண்ணும், இளைஞரும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்த நான்சியின் பெற்றோர், ஆத்திரத்தில் அவரை எரித்துக் கொன்றுள்ளனர் என தெரியவந்தது.

இதையடுத்து, தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீஸார், இக்கொலை தொடர்பாக நான்சியின் பெற்றோர் ஜான் பிலிப், ஆரோக்கிய மேரி மற்றும் மைனர் பெண்ணுடன் பழகி வந்த சுரேஷ் குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x