தேர்தல் பணிகளை கவனிக்க அதிமுக-வில் சிறப்புக் குழுக்கள்

தேர்தல் பணிகளை கவனிக்க அதிமுக-வில் சிறப்புக் குழுக்கள்
Updated on
1 min read

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனித்துப் போட்டியிடும் அதிமுக, தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக் கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும் முதல் குழுவில் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 7 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவானது சட்டமன்றத் தொகுதி வாரியாக 7 பேர் கொண்ட குழுக்களை அமைக்கும்.

சட்டமன்றக் குழுவானது தங்கள் எல்லைக்குள் ஒன்றியக்குழு, நகரக் குழு, பேரூராட்சிக் குழு மற்றும் மாநகராட்சிக் குழு என 4 குழுக்களை அமைக்கும். இந்த குழுக்களிலும் தலா 7 பேர் அங்கத்தினர்களாக இருப்பார்கள். இவர்களோடு ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிச் செயலர்கள் உள்ளிட்டோரும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப் பாளர்களாக செயல்படுவார்கள்.

இதற்கு அடுத்தபடியாக 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒன்று வீதம் மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும். இதிலும் தலா 7 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இல்லாமல் 16 பேர் கொண்ட பூத் கமிட்டியும் அமைக்கப்படுகிறது. இளைஞர் பாசறையில் நால்வரும் இளம்பெண்கள் பாசறையில் இருவரும் மகளிர் அணியில் இருவரும் பூத் கமிட்டியில் அவசியம் இடம்பெற வேண்டும் என்றும் அதிமுக-வினருக்கு உத்தரவிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in