விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு

விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு
Updated on
1 min read

விசைப்படகு பழுதால் நடுக்கடலில் கடந்த 6 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்கள், கடலோரக் காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நாகப்பட்டினம் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக் குச் சொந்தமான விசைப்படகில் அதே தெருவைச் சேர்ந்த முருகே சன்(43), கிஷோர்(19), சம்பா தோட்டத்தைச் சேர்ந்த இளங் கோவன்(33), ரகு(36), ராஜேந் திரன்(59), மேலவாஞ்சூரைச் சேர்ந்த லட்சுமணன்(33), முரளி(24), தூத் துக்குடியைச் சேர்ந்த சிலுவை(65), நாகூரைச் சேர்ந்த சதீஷ்(25), சூர்யா(19), விஜய்(20) ஆகிய 11 பேரும் கடந்த 14-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற இவர்கள் கடந்த 20-ம் தேதி கரை திரும்பியிருக்க வேண் டிய நிலையில், கரைக்குத் திரும்ப வில்லை. அவர்களின் செல்போனும் தொடர்பு எல்லைக்குள் இல்லை.

படகின் உரிமையாளர் ரவிச்சந்தி ரன், கடலில் இருந்து திரும்பிய மற்ற விசைப்படகு மீனவர்களிடம் விசாரித்தும், அவரது படகு குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மீன்துறை மற்றும் கட லோரக் காவல் படைக்கு ரவிச் சந்திரன் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்திய கட லோரக் காவல் படையினர் கடந்த 23-ம் தேதி ஹெலிகாப்டரில் சென்று கடலுக்குள் படகைத் தேடினர். அவர்களின் தேடுதலில் சீர்காழியை அடுத்த பழையார் துறைமுகத்தில் இருந்து 85 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மோட் டார் பழுதானதால் நகர முடியாமல் அந்தப் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன் பின்னர், கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘அமிகா’ கப்பல் கடலுக்குச் சென்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டி ருந்த மீனவர்களின் விசைப் படகையும், மீனவர்களையும் மீட்டுக்கொண்டு நேற்று காரைக் கால் துறைமுகத்துக்கு வந்தது.

அங்கிருந்து மீனவர்கள், விசைப்படகுடன் நேற்று மதியம் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in