Published : 02 Aug 2016 07:49 AM
Last Updated : 02 Aug 2016 07:49 AM
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘‘சட்டப்பேரவையில் இதுவரை கேள்வி நேரம் தொடங்கப்படவில்லை. ஏராளமான கேள்விகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஆளும் கட்சி உறுப்பினர்களும் அளித்துள்ள னர். ஆனாலும், இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் கேள்வி நேரம் இல்லை. அதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. எப்போது கேள்வி நேரம் தொடங்கும்?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘உறுப் பினர்கள் அளித்துள்ள கேள்விகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பதில்கள் வந்தவுடன் அவை எடுத்துக் கொள்ளப்படும். விரைவில் கேள்வி நேரம் தொடங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT