Published : 23 Sep 2016 08:56 AM
Last Updated : 23 Sep 2016 08:56 AM

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் கொலை, துரை தயாநிதி யின் நண்பர் ராம்கி கொலை முயற்சி வழக்குகளில் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை சத்தியசாய் நகரில் பொட்டு சுரேஷ் 31.1.2013-ல் கொலை செய்யப்பட்டார். இவ் வழக்கில் அட்டாக் பாண்டியை போலீஸார் மும்பையில் 22.9.2015-ல் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அட்டாக் பாண்டி யின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை 21.7.2016-ல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் 2-வது முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணனை கோ.புதூரில் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கிலும் அட்டாக் பாண்டி குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி யின் ஜாமீன் மனு மாவட்ட நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட் டது. இதனால், உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமை யானவை. ஏற்கெனவே மனு தாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டபோது நிலவிய சூழலிலும், தற்போதைய சூழலி லும் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. மனுதாரர் தனது மனை விக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ஒரு காரணமாக ஏற்க முடியாது. இதனால் மனுதாரரின் 2 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படு கின்றன” என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x