Published : 13 Jun 2016 07:41 AM
Last Updated : 13 Jun 2016 07:41 AM
தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி சென்னையில் நேற்று சந்தித்தார்.
புதுவை மாநிலத்தில் காங் கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றுள் ளார். அவரது பதவியேற்பு விழாவில் கூட்டணிக் கட்சியான திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில், ஸ்டாலினை அவரது இல்லத்தில் நாராயணசாமி நேற்று காலை சந்தித்தார்.
பின்னர், இந்த சந்திப்பு தொடர் பாக நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல அவரை சந்தித்தேன். புதுவை மாநில வளர்ச்சிப்பணிகள் குறித்து நாங்கள் பேசினோம். புதுவையின் வளர்ச்சிக்காக அரசுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
மேலும், புதுவையில் மது விலக்கு வருவதற்கு சாத்திய மில்லை. புதுவையில் நடைபாதை கடைகள் அதிகமுள்ளன. இது போக்குவரத்துக்கு நெரிசலாக உள்ளது. எனவே, வியாபாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கவுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT