Published : 01 Oct 2014 02:08 PM
Last Updated : 01 Oct 2014 02:08 PM
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6-ம் தேதியன்று கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கு அரசு பொது விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5-ம் தேதிக்கு பதிலாக 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்றும், எனவே, தமிழக அரசு அன்றைய தினம் விடுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோள் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை அக்டோபர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT