Published : 14 Oct 2014 09:51 AM
Last Updated : 14 Oct 2014 09:51 AM

செயற்கைக் கோள் கவுன்ட் டவுண் தொடங்கியது

பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் கடல் ஆராய்ச்சிக்கான ‘ஐஆர்என்எஸ்எஸ்-1சி’ செயற் கைக்கோள், வரும் 16-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற் கான 67 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கடல் ஆராய்ச் சிக்காக ‘ஐஆர்என்எஸ்எஸ்-1சி’ என்ற செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி-சி26 ராக்கெட் மூலம் வரும் 16-ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான, 67 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று காலை 6.32 மணிக்கு தொடங்கியது. ராக்கெட்டில் உள்ள 4 நிலைகளில் எரிபொருள் நிரப்பும் பணி நேற்று நிறைவடைந்தது. இத்தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.

1,425.4 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x