தாமிரபரணி தண்ணீரைக் காக்க அனைத்து கட்சிகளும் களமிறங்க வேண்டும்: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த நல்லகண்ணு அழைப்பு

தாமிரபரணி தண்ணீரைக் காக்க அனைத்து கட்சிகளும் களமிறங்க வேண்டும்: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த நல்லகண்ணு அழைப்பு
Updated on
1 min read

தாமிரபரணி தண்ணீரைக் காக்க அனைத்துக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்று, இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தாமிர பரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க அனுமதிக்கக் கூடாது என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நல்லகண்ணு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களையும் வறட்சி பாதித்த மாவட் டங்களாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவில்லை. வறட்சி நிவாரணத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண் டும். இதை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

வறட்சியால் தமிழகத்தில் 250 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் 17 பேருக்கு மட்டும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் பயறுவகை பயிர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வறட்சி நிலவும் நேரத்தில் வெளி நாட்டு குளிர்பான ஆலைகளுக்கு, தாமிரபரணி தண்ணீரை விற்பது கண்டிக்கத்தக்கது. குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீரை வழங்கும் ஒப்பந்தத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தாமிரபரணிக்காக அனைத்து கட்சிகளும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in