Published : 02 Mar 2017 10:09 AM
Last Updated : 02 Mar 2017 10:09 AM
திருநெல்வேலியில் பசுபதிபாண்டி யன் ஆதரவாளர் சிங்காரம் (48) கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுபாஷ் பண்ணையாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என, மாநகர காவல்துறை ஆணை யர் திருஞானம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள புல்லாவழி கிராமத் தைச் சேர்ந்தவர் சிங்காரம். பசுபதிபாண்டியனின் ஆதரவாள ரான இவர் மீது 13 கொலை வழக்குகள் மற்றும் வெடிபொருட் கள் வைத்திருந்த வழக்கு உள் ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்காரத்தை, கடந்த 24-ம் தேதி காலை, தூத்துக்குடி நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். பாளையங் கோட்டை கே.டி.சி. நகர் அருகே கார்களில் வந்த 15 பேர் கும்பல், போலீஸாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கி, சிங்காரத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
போலீஸார் நடத்திய விசார ணையில் சுபாஷ் பண்ணையார் கோஷ்டியினரே இக்கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. குற்ற வாளிகளைக் கைது செய்ய 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந் தன.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த கார் விற்பனை முகவர் வெஸ்லி (28), கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருள்மணி (25), சந்தோஷ் (26), கார்மேகம் என்ற அபீஸ் (18), சேட்டு என்ற அஜீன் (20) ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல்துறை ஆணையர் திருஞானம், ``திருநெல்வேலியில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் சிங்காரம் கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபாஷ் பண்ணையாரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
சுபாஷ் பண்ணையார் மும்பைக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலை அடுத்து, தனிப்படை போலீஸார் மும்பைக்கு சென்றிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT