Published : 17 Jun 2016 07:59 AM
Last Updated : 17 Jun 2016 07:59 AM
வரும் 2017-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு மற்றும் ஆலந்தூருக்கு இடையே பயணிகள் சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது. சின்னமலைக்கும், விமான நிலையத்துக்கும் இடையேயும், ஆலந்தூருக்கும் பரங்கிமலைக்கும் இடையேயும் பயணிகள் சேவை விரைவில் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு, 2017-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து தடங் களிலும் முழுமையாக பயணிகள் சேவை தொடங்கப்படும்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரை யிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு தனது தொடர் முயற்சிகளால் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான பணிகளையும் அரசு விரைவாக செயல்படுத்த உறுதி கொண் டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT