Published : 21 Mar 2017 08:54 PM
Last Updated : 21 Mar 2017 08:54 PM

ஐ.எஃப்.எஸ் தேர்வில் தமிழக மாணவி பல்லவி சர்க்கார் 4-ம் இடத்தைப் பிடித்தார்

இந்திய வன ஆட்சிப்பணி இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த பல்லவி சர்க்கார் தேசிய அளவில் 4-ம் இடம் பிடித்தார்.

இந்திய வன ஆட்சிப்பணிகான தேர்வில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நேர்முகத்தேர்வு நடந்தது. தற்போது இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் அகில இந்திய அளவில் காலியாக உள்ள 110 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இடம்பிடித்து சாதனை படைத்தனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த பல்லவி சர்க்கார் தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் 4-ம் இடமும் பிடித்தார்.

யூ.பி.எஸ்.சி-யின் இணையதளத்தில் இந்திய வன ஆட்சிப்பணி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x