தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்
Updated on
1 min read

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி யில், “வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற் றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற் றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல் சியஸாகவும் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in