Published : 26 Feb 2014 03:48 PM
Last Updated : 26 Feb 2014 03:48 PM

தமிழக மீனவர்கள் 87 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 87 பேருக்கு மூன்றாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை நிதிமன்றம் இன்று உத்திரவிட்டது.

கடந்த ஜனவரி 29 அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரையும், பிப்ரவரி 3 அன்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 19 பேர்களையும், பிப்ரவரி 4 அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், மண்டபம் மீனவர்கள் 12 பேரையும், நாகப்பட்டிணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, யாழ்பாணம் மாவட்டம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 87 பேரும் புதன்கிழமை மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி மகேந்திர ராஜா, ஜனவரி 29 அன்று சிறைப்பிடிக்கப்பட்ட 38 மீனவர்களுக்கு மார்ச் 11 வரையிலும், மீதமுள்ள 49 மீனவர்களுக்கு மார்ச் 12 வரையிலும் காவலை மூன்றாவது முறையாக நீட்டித்து உத்திரவிட்டார். பின்னர் தமிழக மீனவர்கள் 87 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x