Published : 11 Mar 2017 10:02 AM
Last Updated : 11 Mar 2017 10:02 AM
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக சந்தனம் வைக்கப்பட்டிருந்த குடங்கள், சந்தனக்கூடு அலங்கார வண்டியில் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை நாகப்பட்டினத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது.
சந்தனக்கூடு அலங்கார வண்டி, நேற்று அதிகாலை 4 மணியளவில் நாகூர் தர்காவை வந்தடைந்தது. தர்கா வாசலில் தர்கா நிர்வாகிகள், நாகூர் ஜமாத்தினர் வரவேற்று சந்தனக் குடங்களை உள்ளே எடுத் துச் சென்றனர். அதைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணியளவில் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிபு துவா ஓதி வழிபாட்டை நடத்தினார். இதையடுத்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இசை யமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். அவருக்கு புனித சந்தனத்தை தர்கா நிர்வாகிகள் வழங்கினர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அடுத்த ஜாம்புவானோ டையில் உள்ள புகழ்பெற்ற சேக் தாவூது ஆண்டவர் தர்காவில் நேற்று காலை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை செய்தார். தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி அறங் காவலர்கள் தமீம் அன்சாரி, ஜெக்கரியா, சித்திக் அகமது, நூர் முகமது ஆகியோர் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT