Published : 16 Jun 2017 09:33 AM
Last Updated : 16 Jun 2017 09:33 AM
எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர் வெழுதி, அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சத வீதம் வருகை தந்து, ஆனால் செய்முறைத்தேர்வில் கலந்து கொள்ள தவறிய பள்ளி மாண வர்கள், தனித்தேர்வர்கள் ஜூன் 22, 23 (வியாழன், வெள்ளி) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு துணை பொதுத்தேர்வின் அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த முழு விவரங் களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தனிப்பட்ட முறையில், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு இதுகுறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப் படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT