Published : 07 Jul 2016 08:26 PM
Last Updated : 07 Jul 2016 08:26 PM
சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர், வழக்கிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மகேந்திரன், ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ராம்குமார் சார்பில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேபோல, பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ராம்குமாருக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன், ''இந்த வழக்கில் அரசு தரப்பு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அதுபோல ஆட்சேபத்திற்கான காரணத்தை அரசு தரப்பும் பதில்மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், ராம்குமார் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய முகநூலில் பக்கத்தில் பதிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT