

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட் டிருந்த நிலையில் விஜயதரணி எம்எல்ஏ, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் கடந்த 27.9.2015 அன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன் னாள் மாநிலத் தலைவர் இளங்கோவன், விஜயதரணி எம்எல்ஏ ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மாதம் 15-ம் தேதி விஜயதரணி எம்எல்ஏ மீதான வழக்கு மாவட்ட அமர்வு நீதிபதி சதிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயதரணி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்க ளும் ஆஜராகவில்லை. எனவே, வழக்கை ஜூலை 15-க்கு ஒத்தி வைத்ததுடன், விஜயதரணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தபோது, விஜய தரணி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் விலக்கிக்கொள்ளப் பட்டது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சதிக்குமார் உத்தரவிட்டார்.