Published : 22 Sep 2014 11:58 AM
Last Updated : 22 Sep 2014 11:58 AM

கல்லூரி மாணவி தற்கொலை: காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது

நத்தம் அருகே இளைஞர் காதலிக்கும்படி வற்புறுத்தியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

நத்தம் அருகே மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவரது மகள் பானுப்பிரியா (19). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் பானுப்பிரியா விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இவரது உறவினர்கள், நத்தம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் விசா ரணை நடத்தி, நத்தம் அருகே பட்டணம் பட்டியைச் சேர்ந்த சின்னதம்பி (24) என்பவரை பிடித்தனர்.

சென்னையில் கட்டிட வேலை பார்த்துவந்த சின்னதம்பி பானுப் பிரியாவை ஒருதலையாக காதலித்தாராம். கடந்த சில நாள்களுக்குமுன் விடுமுறையில் ஊருக்கு வந்த சின்னதம்பி, வழக்கம்போல பானுப்பிரியாவிடம் காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் மனமுடைந்த பானுப்பிரியா, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று போலீஸ் பாதுகாப் புடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக் டர்கள் சரிதாபானு ஆகியோர், இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சின்னதம்பியைக் கைதுசெய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x