Published : 26 Aug 2016 08:35 AM
Last Updated : 26 Aug 2016 08:35 AM
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு சேலம், ஈரோடு தனியார் பள்ளி முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அளிவிக்கப்பட்டுள்ளது. இதில், சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன்(49) தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவர் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர்.
ஈரோடு பள்ளி முதல்வர்
இதேபோல், ஈரோடு திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி முதல்வர் புவனேஸ்வரி(52), தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கும்பகோ ணத்தை பூர்வீக மாகக் கொண்ட இவரது குடும்பம் ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் குடியேறியதால் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.
வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசிய நல்லாசிரியர் விருதை சீனிவாசன், புவனேஸ்வரிக்கு வழங்கி கவுரவிக்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT