Published : 28 Jun 2019 08:01 AM
Last Updated : 28 Jun 2019 08:01 AM

ஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனம்: உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா புகார்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட தன் பின்னணியில் சீன நிறுவனம் உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பரா யன் ஆகியோர் அடங்கிய அமர் வில் நேற்று நடந்தது.

அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் வாதிடும்போது, “நீரி எனும் மத்திய அரசு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக் கப்பட்டுள்ளது. பல கட்ட ஆய்வு களில் இருந்து ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையை மூடும்போது துப்பாக் கிச் சூடு காரணமாகவே மூடப் படுகிறது எனக் கூறிய தமிழக அரசு தற்போது சுற்றுச்சூழல் மாசு காரணம் என்கிறது.

கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் எங்கிருந்து 20 ஆயிரம் பேர் வந்தார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இது சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. மக்கள் நடத்திய போராட்டத்துக்கும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிபிஐ விசாரணையில் வேதாந்தா நிறுவனம் ஒரு தரப்பாகவும் இல்லை. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தண்டனையை எங்களுக்கு கொடுத்துள்ளனர்.

ஆலையில் பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படவில்லை என் பதால் அமிலங்கள் வெளியேறி கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற் படும் அபாயம் உள்ளது. குறிப்பாக தொழிற்போட்டி காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட தன் பின்னணியில் சீன நிறுவனத் தின் சதி உள்ளது. இந்த ஆலைக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டிய தும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி செய்வதும் அந்த சீன நிறுவனம்தான்’ என குற்றம் சாட்டினார்.

அவரது வாதம் நிறைவு பெறவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கள் இன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x