Last Updated : 28 Jun, 2019 11:50 AM

 

Published : 28 Jun 2019 11:50 AM
Last Updated : 28 Jun 2019 11:50 AM

கோயிலுக்குள் கஞ்சா புகைத்த இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை

கோயிலுக்குள் கஞ்சா புகைத்த இளைஞர்களை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பண்டாரம் (75). குடும்பத்தை விட்டுப் பிரிந்த இவர், மீனாட்சிபுரம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள சுடலை சுவாமி கோயில் அருகே தங்கி மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். இரவில் கோயில் வளாகத்திலேயே தூங்குவது வழக்கம்.

நேற்று (வியாழக்கிழமை) காலையில் பண்டாரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கோயில் அருகே இரவு நேரங்களில் சிலர் கஞ்சா புகைப்பது, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதைப் பண்டாரம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைக் கொலை செய்துள்ளது தெரியவந்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x