Published : 23 Sep 2018 09:57 AM
Last Updated : 23 Sep 2018 09:57 AM

தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு: எழும்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் தகவல் 

தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் ரத்தநோய் துறை டாக்டர் அருணா ராஜேந்திரன் தெரிவித்தார்.

புற்றுநோயில் இருந்து குண மடைந்த குழந்தைகளை மகிழ்விக் கும் விதமாக, சென்னை எழும் பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று ‘ரோஸ் தினம்’ கொண்டாடப்பட்டது. மருத் துவமனை இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் ரத்தநோய் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.சாந்தி, டாக்டர் அருணா ராஜேந்திரன், குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ஜெ.முத்துக்குமரன் கலந்துகொண்டனர். புற்றுநோயில் இருந்து குணமடைந்த சுமார் 150 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் இதில் பங்கேற்றனர். குணமடைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வக் குழுவினருக்கும் சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு நம்பிக்கை அளித்தும், உற்சாகப் படுத்தியும் டாக்டர்கள் பேசினர்.

50 குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கான புற்றுநோய் குறித்து குழந்தைகள் ரத்தநோய் துறை உதவி டாக்டர் அருணா ராஜேந்திரன் கூறியதாவது:

வெளிநாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளில் 80 முதல் 90 குழந்தைகள் குணமடை கின்றனர். நம் நாட்டில் 70 பேர் குண மடைகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் ரத்தப் புற்றுநோயால் தான் பாதிக்கப்படுகின்றனர். 100 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக் கப்பட்டால், அதில் 50 குழந்தை களுக்கு ரத்தப் புற்றுநோய் இருக்கும்.

தனியார் மருத்துவமனையில் ரூ.12 லட்சம் வரை செலவாகும் அனைத்து சிகிச்சைகளும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. 3 ஆண்டு சிகிச்சையில் புற்றுநோயில் இருந்து குழந்தைகள் முழுவதுமாக குணமடைந்துவிடுவார்கள். முதல் 6 மாதம் மட்டுமே தீவிர சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் இரண்டரை ஆண்டுகள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றபடியே சிகிச்சை பெறலாம்.

காய்ச்சல், விடாத காய்ச்சல், கால் வலி, முட்டி வலி, ரத்த சோகை, நெறி கட்டுதல் போன்றவை ரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக குழந்தை களை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண் டும்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் புதிதாக 6,000 குழந்தை கள் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x