Published : 18 Sep 2018 09:58 AM
Last Updated : 18 Sep 2018 09:58 AM
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழ வேற்காடு ஏரியை ஒட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மற்றும் ஆந்திர மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் சேரும் இடமான, பழவேற்காடு முகத்துவாரம் வழியாகத்தான் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த முகத்துவாரப் பகுதிகளில் அவ்வப்போது மணல் மேடுகள் உருவாகி சுழற்சி முறையில் கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் முழுமையாகச் சென்று வருவது தடைப்பட்டதோடு, மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்குள் செல்ல முடியாத நிலையும் இருந்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பும், மணல்மேடுகளால் முகத்துவாரம் அடைபட்டதால் ஏற்பட்ட சிக்கல் கள் குறித்து புகார் தெரிவித் தும் மீன்வளத் துறை அதிகாரி கள், வருவாய்த் துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படு கிறது. ஆகவே, பழவேற்காடு முகத் துவாரத்தை தூர்வாரி, மீண்டும் மணல் மேடு உருவாகாமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகள் மூலம் நேற்று பழவேற் காடு முகத்துவாரப் பகுதிக்கு வந்து, கருப்புக் கொடியேந்தி கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
காலை 8 முதல் மதியம் 2.30 மணி வரை நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர், மீன் வளத் துறை அமைச்சர் மற்றும் இயக்குநர் யாரும் வரவில்லை. மாறாக கோட்டாட்சியர்(பொறுப்பு), வட்டாட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட வர்களே வந்து சமாதானப்படுத் தினர். அவர்கள் நிரந்தரத் தீர்வு குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என, மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆகவே, மீனவர்களின் போராட்டம் இன்றும் தொடரும். அந்தப் போராட்டம், மீன் வளத் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் வந்து, முகத்துவாரத்தை தூர்வாரி, நிரந்தரத் தீர்வு காணுவ தாக உறுதியளிக்கும் வரை தொடரும் என, மீனவ சங்கங் களின் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழவேற் காடு பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT